உன்னிழலை நேசித்தாலே என்மீது
கோபம் கொள்பவள் நீ,
உன்னிழலை நேசிக்கவே
தயங்கும்போது…
நீ அல்லாத வேறொரு பெண்ணை,
எப்படி நேசிப்பேன் நான் !!!
நீருக்குள்ளே
காற்று ஒழிந்திருப்பது போல
என்றுமே எனக்குள் என்னவள் நீ..!
ஆண்டுகள் பல ஆயினும்
என்னை ஆண்டு கொண்டிருக்கிறது
உன் நினைவுகள்..!
நீ இல்லாது இருந்தும்
நலமாக நான்..!
எண்ணிலடங்கா எண்ணற்ற
நம் நினைவுகளோடு…!
பாமரன் பா.பரத்

Be First to Comment