நிலவிற்காக
தன் சிறகை
விரித்தது
வானம்…..!
சிறகின்
நிழலில்
தங்களையும்
இணைத்தன
நட்சத்திரங்கள்…..
குளிர்
தென்றல்
பட்டதும்
பட்டதும்
வெட்கத்தில்
மலர்ந்தன
பூக்கள்…..!
தன்
துணை தேடி
அகவியது
மயில்…..!
அனைத்தையும்
மறக்கச்செய்தது
என் கன்னத்தில்
உன் இதழ்
பதித்த
முத்தம்……!
– வினோத்