Skip to content

பலி வாங்க காத்திருக்கும் கம்யுனிசம்

நாட்டிற்க்கு வெளியே
உணர்வுக்கொலை..!
நாட்டிற்க்கு உள்ளே
உணவுக்க்கொலை..!
அது நமக்கு தீவிர வாதம்…!
இது நமக்கு தீராத வாதம்…!
அரசியல் வாதிகளிடமும்
அரசுடை வாதிகளிடமும்
நான் வேண்டுவது ஒன்றுதான்…!
உலகை திருத்தும் முன்
உன்னை நீ திருத்திக்கொள்…!
இன்னொருவள் மகனை
கொல்லும் முன்
ஒரு நிமிடம்
யோசித்துக்கொள்(ல்)…..!
உனக்கும் ஒரு தாய்
இருக்கிறாள் என்று…!
அவர்கள் பெற்றோர் அழுவது போல்
உன் பெற்றோரும்
ஒருநாள் அழுகக்கூடும்…!
தமிழன்…!
இனம் அழிந்தாலும்
இந்தியன் என்ற உணர்வு மறைந்தாலும்…!
நின்றுகொண்டிருப்போம்
மனிதநேயம் மிக்க கம்யுனிசம்
என்ற கருவியை தாங்கியபடி…!
நாங்கள்
இணைந்திருப்போம்
இருக்கும் வரை அல்ல
இறக்கும் வரை…!
யோசித்து செயல்படு…!

உன் தாய் அழாமல் பார்த்துக்கொள்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *