Skip to content

இரவின் மடியில்..!

பூச்சிகள் இசை இசைக்க,
தெரு நாய்கள் அலற,
மிகவேகத்தில் வாகனங்கள் பறக்க
கார்மேகங்கள் என்னை கட்டியணைக்க
நடுக்கத்துடன் தொடங்கியது
என் நள்ளிரவு..!
இதுவரை யாரிடமும்
இரவல் வாங்காத நான்..!
இரவிடம் இரவல்
கேட்டு நிற்கிறேன்..!
சற்று தாமதமாக விடி என்று..!
இரவுகளுக்கு என்னை கடன்காரனக்க
விருப்பமில்லை..!
அதனால் தான் என்னவோ..!
சீக்கிரமே விடிந்து விடுகிறது..!
விடயலை தேடி பலர் காத்திருக்க
நானோ சற்று ஓய்வெடுக்க
காத்திருக்கிறேன் இரவின் மடியில் ..!
மழலையின் சிரிப்பில் கிடைக்காத இன்பமும்,
மதுவில் கிடைக்காத போதையும்..!
என் விழியோரம் ஓடியது
தண்ணீராக..!
நான் உறங்காமல்
விழித்திருந்த இந்த இரவுகள்
இரவல் வாங்கப்பட்டவை அல்ல..!
நான் எனக்காக விழிதிறந்து
காணும் கனவுகள்..!
நான் விழித்துறங்கும் வரை..!
என் விழி திறந்திருக்கும் வரை..!
இந்த கனவு
கலையவோ
களவு போகவோ
வாய்ப்பில்லை..!
என்றும் நான்
இரவல் பிள்ளையாய்,

இரவின் மடியில்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *