Skip to content

ஏக்கம்!!!!

இன்று நீ வருவாயா,
இன்று என்னை சந்திப்ப்பாயா,
இன்றுடன் உன்னை கண்டு
நாட்கள் பல கடந்தன!…

பக்கத்து மாடி வீட்டிற்கு வந்த உனக்கு,
அருகில் இருக்கும் இந்த ஏழை வீட்டிற்கு
வர நேரம் இல்லையோ?
நான் மட்டும் அல்ல,
என் வீட்டில் அனைவரும்,
உன்னை காண துடிகின்றனர்!…

நான் உன்னை மறந்து
உறங்கச்சென்றேன்!
ஆனால்,

உறக்கமோ என்னை மறந்து
உன்னையே
நினைத்துக்கொண்டிருக்கிறது!…
இதற்க்கு மேலும் நீ,
வரவில்லை என்றல்
நாங்கள் மரணிப்பதை
தவிர வேறு வழி இல்லை!…

இப்படிக்கு,
ஒரு ஏழை சிறுவனின்
ஒருவேளை உணவுக்கான
ஏக்கம் .

பா.பரத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *