Skip to content

ஒருத்தியின் செல்ல மகள்













அலுவலகத்திலிருந்து
வேகமாய்
வீடுதிரும்ப
நினைத்த என்னை…!

ஊர்வலம்போல்
ஊர்ந்து வரச்செய்தது
எனக்கு
முன்சென்ற
மழலையின்
சிரிப்பு…!

தெரிந்த பலர்
சொல்லாமல்
விலகும்
நேரத்தில்
,
தெரியாத இந்த
மழலை
கையசைத்து
டாட்டா என்றதும்
மனமுருகிப்போனது…!

மங்கையர்
பலரிடம்
கிடைக்காத காதலை,

சட்டென்று
கொடுத்துவிட்டால்
முகம்தெரியாத
மங்கை
ஒருத்தியின்
செல்ல மகள்..!

சிரிப்பு
என்னும் மந்திரத்தால்…!

அன்புடன்,
பாமரன் பா.பரத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *